ஆப்நகரம்

தோனி வருகைக்கு எவ்வளவு பணம் செலவீடு; இமாச்சல் சட்டசபையில் காரசார விவாதம்!

கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனிக்கு செலவு செய்த பணம் குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 30 Aug 2018, 12:06 am
சிம்லா: கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனிக்கு செலவு செய்த பணம் குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil Dhoni


இமாச்சல் பிரதேசத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வருகை புரிந்துள்ளார். அவருக்கு மாநில அரசு மக்கள் வரிப்பணத்தை வாரி இறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதற்கிடையில் இமாச்சல் பிரதேச சட்டசபையில் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, தேஹ்ரா தொகுதி எம்.எல்.ஏ ஹோஸ்யார் சிங், தோனி வருகைக்கு செலவு செய்த தொகை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ஹிமாச்சல் மாநில அரசின் விருந்தினராக தோனி கருதப்படுகிறார்.

எனவே விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க கடந்த 27ஆம் தேதி, தோனி வருகை புரிந்தார். 5 நாட்கள் தங்கியிருக்கிறார். அவருக்கு மாநில அரசு சார்பில் பாதுகாப்பு மட்டுமே அளிக்கப்படுகிறது. அவரைப் போன்ற பிரபலத்திற்கு இது நிச்சயம் அவசியம்.

இதைத் தவிர ஒரு ரூபாய் கூட தோனிக்கு செலவிடப்படவில்லை என்றார். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்விந்தர் சிங் சுகு, மாநில அரசின் விருந்தினராக தோனி கருதுவது குறித்தோ அல்லது அவரது வருகைக்காக பணம் செலவு செய்யப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பவில்லை.

எனது கேள்வி, பிற விளம்பர பட குழுவினரிடம் இருந்து குறிப்பிட்ட தொகை வசூல் செய்யப்படுகிறது. இதேபோல் தோனி பங்கேற்ற விளம்பரப் படக் குழுவிடமும் உரிய கட்டணம் வசூலிக்கப்பட்டதா என்று குறிப்பிட்டார்.

Himachal Pradesh MLA raises question in assembly over state govt spend money on Dhoni's visit.

அடுத்த செய்தி