ஆப்நகரம்

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி!

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 26 Nov 2018, 8:34 am
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil bus


டெல்லியிலிருந்து சிம்லாவிற்கு சுற்றுலா வந்தவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சிம்லா – சோலான் எல்லைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று டெல்லியில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் சென்ற மற்றொரு பேருந்து சிர்மாவர் மாவட்டத்தில் உள்ள கியாரி நுல்லா அருகில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அடுத்த செய்தி