ஆப்நகரம்

சிறுமியின் கைகளை பிடித்துக் கொண்டு பேன்ட் ஜிப்பை அவிழ்த்தால் பாலியல் வன்கொடுமை அல்ல!

சிறுமியின் கைகளை பிடித்துக் கொண்டு பேன்ட் ஜிப்பை அவிழ்த்தால் அது பாலியல் வன்கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 28 Jan 2021, 8:40 pm
போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றை விசாரித்த் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலா சமீபத்தில் தீர்ப்பு ஒன்றை வழங்கினார். , "skin-to-skin contact with sexual intent" அதாவது பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும் என்றும், 'mere groping' will not fall under sexual assault அதாவது விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது” என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த தீர்ப்பானது கடுமையான விமர்சனங்களை எழுப்பிய நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யவும் கே.கே.வேணுகோபாலுக்கு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் நீதிபதி புஷ்பா கனேடிவாலா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 50 வயதான நபர் ஒருவருக்கு அமர்வு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.25,000 அபாராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. “சம்பவத்தன்று சிறுமியின் கைகளை பிடித்துக் கொண்டிருந்த 50 வயது நபர் தனது பேன்ட் ஜிப்பை அவிழ்த்து வைத்திருந்தார். தனது ஆணுறுப்பை வெளியே எடுத்த அவர் சிறுமியை படுக்கைக்கு தூங்குவதற்கு அழைத்ததாக சிறுமி தெரிவித்தார்” என்று சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

பாலியல் தொந்தரவு: சர்ச்சைக்குரிய தீர்ப்பை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேடிவாலா, சிறுமியின் கைகளை பிடித்துக் கொண்டு பேன்ட் ஜிப்பை அவிழ்த்தால் அது போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு கீழ் வராது என்று தெரிவித்துள்ளார். மேலும், அத்தகைய நடவடிக்கை இந்திய தண்டனை சட்டத்தின் 354-A(1)(i)இன் கீழ் பாலியல் துன்புறுத்தலாக கருத்தில் கொள்ளப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு கீழ் குற்றம் சாட்டப்பட வேண்டுமெனில், பாலியல் நோக்கத்துடன் தோலுடன் தோல் தொடர்பு கொள்வது அவசியம் என்று தெரிவித்துள்ள நீதிபதி, “மேற்கண்ட வழக்கில் அதுமாதிரி எதுவும் நடக்கவில்லை என்பதால், போக்ஸோ சட்ட வரையறையின் மூன்றாம் பகுதி வரம்பின் கீழ் any other Act with sexual intent which involves physical contact without penetration" அதாவது பாலியல் நோக்கத்துடன் ஊடுருவல் இல்லாமல் உடல் ரீதியான தொடர்பை உள்ளடக்கியதாக கருத்தில் கொள்ளப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

போக்ஸோ சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை என்பது - “பாலியல் நோக்கத்துடன் குழந்தையின் யோனி, ஆண்குறி, ஆசனவாய் அல்லது மார்பகத்தை தொடுவது அல்லது குழந்தையைக் கொண்டு தங்களது யோனி, ஆண்குறி, ஆசனவாய் அல்லது மார்பகத்தைத் தொடச் செய்வது. அல்லது பாலியல் நோக்கத்துடன் உடல் ரீதியான தொடர்பை ஊடுருவாமல் கொள்வது” பாலியல் வன்கொடுமையின் கீழ் வரும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த செய்தி