ஆப்நகரம்

கனமழையால் தத்தளிக்கும் மும்பை..! இயல்புநிலை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை..

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் தவித்து வருகின்றனர். தொடரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Sep 2019, 10:54 am
மும்பை மாநகர் மகாராஷ்டிராவில் இடைவிடாது பெய்து வரும் மழையால் மக்கள் வீட்டிலேய முடங்கியுள்ளனர். மேலும் நீர் நிலைகள் நிரம்பி சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த ஜூலை மாதம் பெய்த மழையின் பாதிப்பு இன்னும் அப்பகுதியில் சீராகவில்லை.
Samayam Tamil 11


இனி வாகனங்களில் இந்த மாதிரி ''ஸ்டிக்கர்'' ஒட்டினால் அபராதம்.. - போக்குவரத்து துறை அதிரடி.!

அதிகபட்சமாக சில இடங்களில் பன்னிரண்டு முதல் பதினெட்டு செ.மீ வரை மழை அளவு பதிவாகியுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் என பலருக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.


தலித் என்பதால் ஆந்திரா பெண் எம்எல்ஏவுக்கு நேர்ந்த அவமானம்!!

ரயில் நிலையம், காந்தி மார்க்கெட் ஆகிய முக்கிய பகுதிகளின் சாலைகளில் மழை நீர் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து போலீசார் முன்னெச்சரிக்கை ஏற்பாடை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி