ஆப்நகரம்

கொரோனாவிற்குப் பின் உடல்நலப் பாதிப்பு - குணமாகிவிட்டாரா அமித் ஷா?

கொரோனா தொற்று குணமான பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமித் ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 31 Aug 2020, 1:00 pm
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாரபட்சமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பிற்கு உரிய தடுப்பு மருந்தோ அல்லது சிகிச்சைக்கான மருந்தோ இல்லை. இருப்பினும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவு மற்றும் மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடந்த 2ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Samayam Tamil Amit Shah


இதையடுத்து அவர் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த 18ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிரணாப் முகர்ஜி: மேலும் மோசமடையும் உடல்நிலை... மருத்துவமனை தகவல்

அதாவது மயக்கம், உடல் சோர்வு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா அல்லாதவர்களுக்கான சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையில் அவர் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோவிட்-19 பாதிப்பு குணமடைந்ததற்கு பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை 7 மணிக்கு டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். அவர் பூரணமாக குணமடைந்துவிட்டார். அவர் தனது வழக்கமான பணிகளைத் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி