ஆப்நகரம்

ஊரடங்கு: இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை எந்தத் தடையுமில்லை... யார் யாருக்கு?

இரவு 9மணி முதல் காலை 5 மணி வரை யாரும் வெளியில் நடமாடக் கூடாது என்று மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 12 Jun 2020, 5:28 pm
நாடு முழுக்க ஜூன் 30 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதால், அவ்வகை வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்கள் தங்கள் எல்லைகளில் இரவு 9மணி முதல் 5 மணி வரை வாகனக்களை நிறுத்தி வைப்பது தொடர்ந்து வருகிறது.
Samayam Tamil uts on movements between 9pm to 5am
ஊரடங்கு: இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை எந்தத் தடையுமில்லை... யார் யாருக்கு?


இந்நிலையில், வாகனங்களை அப்படி நிறுத்தக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் , “ஜூன் 30 வரை இரவு 9மணிக்கு மேல் காலை 5 மணி வரை யாரும் நடமாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தடையின் நோக்கம், மக்கள் கூட்டமாக இடம்பெயருவதைத் தடுப்பதே. அத்தியாவசியப் பொருட்களின் இயக்கத்தை முடக்குவது அல்ல.

ஆனால், சில மாநிலங்கள் அத்தியாவசியப் பொருட்கள் வரும் வாகனங்களையும், இடைவெளியுடன் / தனியே ஊர் திரும்பும் நபர்களையும், பஸ் மற்றும் ரயில் மூலம் வருபவர்களையும் எல்லையிலேயே நிறுத்தி வைக்கின்றன என்பது எங்கள் கவனத்துக்கு வருகிறது.

இந்தக் கடிதத்தின் மூலம், மேற்கண்ட வகையிலான இயக்கத்தை எந்தத் தடையும் செய்யாமல் அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

மேலும், இதற்கான வழிகாட்டு அறிவுறுத்தல்களை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும், மாவட்ட நிர்வாகங்களுக்கும் ஏற்ப அமைக்கும் படியும் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



இதன்படி, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையில், சரீர விலகலுடன் பயணம் மேற்கொள்வோரையும், அத்தியாவசியப் பொருட்களுடன் வரும் வாகனங்களையும் நெடுஞ்சாலைகளில் தடுத்து நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி