ஆப்நகரம்

Coronavirus Vaccine: கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும்? - பிரதமர் மோடி!

மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், முன்னதாக பிரதமர் மோடி பேசிய விஷயங்களை இங்கே காணலாம்.

Samayam Tamil 14 Sep 2020, 1:00 pm
கொரோனா ஊரடங்கிற்கு இடையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல்முறை இரு அவை நடவடிக்கைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் வரும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. DRDO தயாரித்துள்ள சிறப்பு கிட்கள் அனைத்து எம்.பிக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக எம்.பிக்கள் போதிய சரீர இடைவெளி விட்டு அமரும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil PM Modi


இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நம்பிக்கை உள்ளது. அதுவரை நாட்டு மக்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

உலகின் எங்காவது ஒரு மூலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும். அது மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வர வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்கான வேலைகளில் நமது விஞ்ஞானிகளும், சர்வதேச விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாம் அனைவரும் இந்தப் பிரச்சினையில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்; முதல்முறை மாற்றங்கள் முதல் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் வரை!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருக்கும் வரை நமது வேலை தொடர்ந்து நீடிக்கும். இதற்கான களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இம்முறை மாநிலங்களவை, மக்களவை ஒரேநாளில் வெவ்வேறு நாட்களில் நடைபெறுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டத்தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு கூட்டத்தொடர் சிறப்பாக நடைபெற அனைத்து எம்.பிக்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். லடாக் எல்லையில் நமது ராணுவ வீரர்கள் திறம்பட செயல்பட்டு பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். ஒட்டுமொத்த நாடும் ராணுவ வீரர்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் கைகோர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

அடுத்த செய்தி