ஆப்நகரம்

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

மும்பை பயந்தர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் ஏறுவதற்காக காத்துக் கொண்டு இருக்கும்போது திடீரென ஒரு இளைஞர் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை அளித்துள்ளது.

TOI Contributor 18 Jul 2016, 1:39 pm
மும்பை பயந்தர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் ஏறுவதற்காக காத்துக் கொண்டு இருக்கும்போது திடீரென ஒரு இளைஞர் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை அளித்துள்ளது.
Samayam Tamil horrific peak hr suicide caught on camera
ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை


நய்காவன் என்ற இடத்தில் இருந்து சர்ச்கேட்டிற்கு பயணிகள் ரயில் ஒன்று கடந்த 10ஆம் தேதி சென்று கொண்டு இருந்தது. அப்போது ரயில் பயந்தர் ரயில் நிலையத்திற்குள் வரும்போது, ரயிலில் ஏறுவதற்கு பயணிகள் காத்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ரயில் முன் பாய்ந்து 30 வயதுகளில் மதிக்கத்தக்க ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

யாரும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது வைரலாகி வருகிறது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் இறந்து ஒரு வாரம் ஆகியும் தெரிய வரவில்லை. அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் மூலம் அவரது முகவரியை போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி