மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரு பாதங்களை வெட்டி தூக்கி எறிந்த கொடூர சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளாா்.
ஹைதராபாத்தில் உள்ள எரகடா என்ற பகுதியில் மனநல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள பெண் நோயாளியை சிலர் கடந்த புதன்கிழமை தாக்கியுள்ளனர். அந்த மருத்துவமனையில் உள்ள ஆண் நோயாளிகள் பரிசோதனை செய்யப்படும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் இரு பாதங்களை வெட்டி, மருத்துவமனையின்மேல் கூரையின் மீது எறிந்துள்ளனர். அதிக ரத்தம் வெளியேறியதால், அவர் மரணமடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிவிஜய் குமார் கூறியிருப்பதாவது, ’இந்த சம்பவம் நடைபெற்ற சில மணிநேரத்தில் நாங்கள் இங்கே வந்துவிட்டோம். மருத்துவமனை முழுவதும் தேடினோம் ஆனால் சந்தேகப்படும் வகையில் யாரும் இல்லை. இந்த மருத்துவமனை 56 ஏக்கரில் அமைந்துள்ளது. மருத்துவமனைக்கு சொந்தமான 10 ஏக்கரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சுமர் 100 குடும்பங்கள் வசித்து வருகிறது.அவர்கள் பல நேரங்களில் நோயாளிகளை தாக்குவது உண்டு. மேலும் தற்போது கொல்லப்பட்ட பெண் நோயாளியின் கால் கொலுசை திருடவே அவரது இரு பாதங்களை வெட்டி எரிந்துள்ளனர் என்று கூறினார்.
மேலும்கொல்லப்பட்ட பெண் நோயாளியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னா் தான் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும் என்று காவல் துறை அதிகாாி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள எரகடா என்ற பகுதியில் மனநல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள பெண் நோயாளியை சிலர் கடந்த புதன்கிழமை தாக்கியுள்ளனர். அந்த மருத்துவமனையில் உள்ள ஆண் நோயாளிகள் பரிசோதனை செய்யப்படும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் இரு பாதங்களை வெட்டி, மருத்துவமனையின்மேல் கூரையின் மீது எறிந்துள்ளனர். அதிக ரத்தம் வெளியேறியதால், அவர் மரணமடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிவிஜய் குமார் கூறியிருப்பதாவது, ’இந்த சம்பவம் நடைபெற்ற சில மணிநேரத்தில் நாங்கள் இங்கே வந்துவிட்டோம். மருத்துவமனை முழுவதும் தேடினோம் ஆனால் சந்தேகப்படும் வகையில் யாரும் இல்லை. இந்த மருத்துவமனை 56 ஏக்கரில் அமைந்துள்ளது. மருத்துவமனைக்கு சொந்தமான 10 ஏக்கரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சுமர் 100 குடும்பங்கள் வசித்து வருகிறது.அவர்கள் பல நேரங்களில் நோயாளிகளை தாக்குவது உண்டு. மேலும் தற்போது கொல்லப்பட்ட பெண் நோயாளியின் கால் கொலுசை திருடவே அவரது இரு பாதங்களை வெட்டி எரிந்துள்ளனர் என்று கூறினார்.
மேலும்கொல்லப்பட்ட பெண் நோயாளியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னா் தான் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும் என்று காவல் துறை அதிகாாி தெரிவித்துள்ளார்.