ஆப்நகரம்

உணவகங்களில் பார்சல் மட்டும் தானா? அமர்ந்து சாப்பிட முடியாதா? - வருகிறது புதிய உத்தரவு!

ஊரடங்கு காலத்தில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

Samayam Tamil 20 May 2020, 10:36 am
கர்நாடக மாநிலம் பெங்களூரு முக்கிய வர்த்தக நகராக விளங்குகிறது. இங்கு ஏராளமான ஓட்டல்களும், உணவகங்களும் இருக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் பலகட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கில் உணவகங்கள் முதலில் மூடப்பட்டிருந்தன. அதன்பின்னர் பார்சல் வாங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை. இந்நிலையில் முதலமைச்சர் எடியூரப்பாவிடம் உணவக உரிமையாளர்கள் தரப்பில் இருந்து தொடர் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
Samayam Tamil கர்நாடக ஓட்டல்கள்


இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் எடுத்து சென்று ஊரடங்கிற்கு முன்பாக உணவகங்கள் எவ்வாறு செயல்பட்டதோ, அதேபோன்று செயல்பட அனுமதிக்குமாறு வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு 4.0 அமலில் இருக்கிறது.

ஒரு லட்சத்திற்கு பின் ஒரே அடியாய் எகிறிய கோவிட்-19; எப்படி கையாளப் போகிறது இந்தியா?

இந்த காலக்கட்டத்தில் பார்சல் சேவைக்கு மட்டும் உணவகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் உரிய சரீர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய பெங்களூரு ஓட்டல் நிர்வாக சங்கத்தின் தலைவர் பி.சி.ராவ், பார்சல்கள் மூலம் மட்டும் ஓட்டல்கள் தொழிலை நடத்த முடியாது. எங்கள் பிரச்சினைகளை முதலமைச்சர் எடியூரப்பாவிடம் முன்வைத்துள்ளோம்.

இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் பேசி பெற்று தர முயற்சிப்பதாக தெரிவித்ததாக கூறினார். இதேபோல் கர்நாடக ஓட்டல்கள் சங்கத் தலைவர் மதுகர் ஷெட்டி கூறுகையில், சாலையோர மற்றும் தெருவோர உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிட அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால் ஓட்டல்கள், உணவகங்களில் டைனிங் ஹாலில் அமர்ந்து சாப்பிட வாடிக்கையாளர்களை ஏன் அனுமதிக்கக் கூடாது. இதுபற்றி முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம். இதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக எடியூரப்பா கூறியதாக தெரிவித்தார்.

இந்தப் பகுதி மக்களே உஷார்; இன்று கரையை கடக்கப் போகிறது அம்பன் புயல்!

ஓட்டல் சங்கத்தினர் அளித்த தகவலின்படி, கர்நாடகாவில் 7,000க்கும் அதிகமான டைனிங் வசதியுடன் கூடிய ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் இருக்கின்றன. இதில் பெங்களூரு, மைசூர், மங்களூரு, ஹூப்ளியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன.

இதன்மூலம் 10 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இதில் புலம்பெயர் தொழிலாளர்களும் அடங்குவர் என்று தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி