ஆப்நகரம்

பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைப்பு!

ராஜஸ்தானில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ வீடுகளை 5,000 பேர் ஒன்று திரண்டு தீயிட்டு கொழுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Apr 2018, 9:08 am
ராஜஸ்தானில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ வீடுகளை 5,000 பேர் ஒன்று திரண்டு தீயிட்டு கொழுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil rajasthan mla



தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அளிக்கும் புகார் மீது தனிநபரை உடனடியாக கைது செய்யக்கூடாது என்று கடந்த திங்களன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அன்று வடமாநிலங்கள் முழுவதிலும் கலவரம் வெடித்தது. பல இடங்களில் பேருந்துகள், அரசு சொத்துக்கள் தீ வைக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் 7 பேர் பலியாயினர். ஒட்டு மொத்தமாக வடமாநிலங்கள் முழுவதும் வன்முறை களமாக மாறியது.

இதனிடையே ராஜஸ்தான் மாவட்டம் க்ராலி மாவட்டத்தில் உள்ள ஹிண்டாள் நகரில் நடந்த கலவரத்தின் போது, ஆளும் பாஜக எம்.எல்.ஏ ராஜ்குமார் யாதவ் மற்றும்முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ பெரொசிலால் யாதவ் ஆகியோர் வீட்டை சுமார் 5,000 பேர் திரண்டு தீ வைத்தனர்.

அடுத்த செய்தி