ஆப்நகரம்

தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சி எப்படி நடத்த முடியும் : உச்சநீதிமன்றம் கேள்வி

தண்டனை பெற்ற கைதிகள் தேர்தலில் போட்டியிட முடியாதது போல் அரசியல் கட்சிகளை நடத்துவதற்கும் உச்சநீதிமன்றம் விரைவில் தடை விதிக்க வாய்ப்புள்ளது.

Samayam Tamil 13 Feb 2018, 9:42 am
தண்டனை பெற்ற கைதிகள் தேர்தலில் போட்டியிட முடியாதது போல் அரசியல் கட்சிகளை நடத்துவதற்கும் உச்சநீதிமன்றம் விரைவில் தடை விதிக்க வாய்ப்புள்ளது.
Samayam Tamil how a convicted person can run a political party supreme court questions
தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சி எப்படி நடத்த முடியும் : உச்சநீதிமன்றம் கேள்வி


உச்சநீதிமன்றத்தில் பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார் . அதில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தண்டனை பெற்ற கைதிகள் தேர்தலில் போட்டியிட முடியாத போது அவர்களால் எப்படி அரசியல் கட்சி தொடங்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சியை நடத்துவது, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது என்பது தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. இத்தகைய நபர்கள் ஒரு அரசியல் கட்சியை நடத்துவது என்பது ஜனநாக மாண்புகளுக்கும் எதிரானது எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி