அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநில அளவிலான செயற்குழு கூட்டம், கமிட்டியின் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு தலைமையில் திருச்சியில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் முன்னிலை வகித்தார் கூட்டத்துக்கு முன், கிருஷ்ணா ஆழ்வார் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாட்டிநஅ ஒற்றுமை, விலைவாசி உயர்வு , வேலை வாய்ப்பின்மை ஆகிய குறித்து நாட்டு ம்க்களிடம் எடுத்துரைப்பதற்காக ,ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இதேபோன்று நாங்களும் தமிழகத்தில் இவைகுறித்து மக்களிடம் எடுத்து செல்வோம். ராகுல் காந்தியின் இந்த பயணம் உலகம் முழுவதும் அவருக்கும், காங்கிரசுக்கும் பெற்று தந்து வருகிறது.
குஜராத் தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் 16 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து நாங்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!
மல்லிகார்ஜுனா கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆன பின்பு எல்லா மாநிலங்களிலும் என்ன பிரச்னை, அதை எப்படி சரி செய்வது என்று ஆலோசித்து, அதன்படி அவர் திறம்பட செயல்பட்ட கொண்டிருக்கிறார். வரும் நாட்களில் அனைவரும் இணைந்து இந்தியாவிற்காக போராடுவோம்" என்று கிருஷ்ணா ஆழ்வார் தெரிவித்தார்.
குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் அங்கு மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்தது. 78 எம்எல்ஏக்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக வலம் வந்து கொண்டிருந்த காங்கிரஸ், வெறும் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்டது.
புது பாய்ச்சலுடன் களமிறங்கிய ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றாலும், 13 சதவீத வாக்குகளை அள்ளியது. இதன் மூலம் அக்கட்சி தேசிய கட்சிக்கான அங்கீகாரம் விரைவில் கிடைக்க உள்ளது.
முன்னதாக, 'குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு EVM இயந்திரம் தான் காரணம். சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற பாலம் இடிந்த விபத்தில், அரசு நிர்வாகம் மீது மக்கள் கோபத்தில் இருந்தனர். அந்த தொகுதியில் பாஜக 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 13 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உண்மையில் மின் வாக்குபதிவு இயந்திரம் தான் வெற்றி பெற்றுள்ளது. முறையாக தேர்தல் நடைபெறவில்லை. வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றால் தான் உண்மையை பிரதிபலிக்கும்' என்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜெய்னுல் ஆப்தீன் பகிரங்கமாக கூறி இருந்தார்.
குஜராத் தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் 16 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து நாங்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!
மல்லிகார்ஜுனா கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆன பின்பு எல்லா மாநிலங்களிலும் என்ன பிரச்னை, அதை எப்படி சரி செய்வது என்று ஆலோசித்து, அதன்படி அவர் திறம்பட செயல்பட்ட கொண்டிருக்கிறார். வரும் நாட்களில் அனைவரும் இணைந்து இந்தியாவிற்காக போராடுவோம்" என்று கிருஷ்ணா ஆழ்வார் தெரிவித்தார்.
குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் அங்கு மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்தது. 78 எம்எல்ஏக்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக வலம் வந்து கொண்டிருந்த காங்கிரஸ், வெறும் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்டது.
புது பாய்ச்சலுடன் களமிறங்கிய ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றாலும், 13 சதவீத வாக்குகளை அள்ளியது. இதன் மூலம் அக்கட்சி தேசிய கட்சிக்கான அங்கீகாரம் விரைவில் கிடைக்க உள்ளது.
முன்னதாக, 'குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு EVM இயந்திரம் தான் காரணம். சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற பாலம் இடிந்த விபத்தில், அரசு நிர்வாகம் மீது மக்கள் கோபத்தில் இருந்தனர். அந்த தொகுதியில் பாஜக 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 13 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உண்மையில் மின் வாக்குபதிவு இயந்திரம் தான் வெற்றி பெற்றுள்ளது. முறையாக தேர்தல் நடைபெறவில்லை. வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றால் தான் உண்மையை பிரதிபலிக்கும்' என்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜெய்னுல் ஆப்தீன் பகிரங்கமாக கூறி இருந்தார்.