ஆப்நகரம்

இது சித்தார்த்தாவின் உடலா, இல்லையா மீனவர் ரித்தேஷ் கொடுத்த தகவல் என்ன?

கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த் நேற்று இரவு திடீரென மாயமான நிலையில் தற்போது அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது உடல் எவ்வாறு மீனவரால் கண்டெடுக்கப்பட்டது எனப் பார்ப்போம்.

Samayam Tamil 31 Jul 2019, 1:26 pm
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தாவின் உடல் இரண்டு நாள் தேடுதலுக்கு பின் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 29ம் தேதி மங்களூரு அருகே காரில் சென்றுள்ளார் சித்தார்த்தா. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனஉளைச்சலில் காரை விட்டு இறங்கிய சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil sidarth22


’மின்ட் ட்ரீ’ நிறுவனத்தின் பங்குகளை அண்மையில் விற்ற நிலையில் அதேபோல் தனது கஃபே காபி டே நிறுவனத்தையும் கொகோ கோலா நிறுவனத்திற்கு விற்க சித்தார்த்தா பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையில் இருந்த அவர் ஒரு தொழிலதிபராக தோற்றுவிட்டேன் என தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு நேற்று முன்தினம் காணாமல் போனார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் தற்போது நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காபி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சித்தார்த்தாவின் வாழ்க்கை வரலாறு!!

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி வருமான வரித்துறையினர் மும்பை, சென்னை, பெங்களூரு, சிக்மங்களூரு உள்ளிட்ட 20 இடங்களில் சித்தார்த்தாவின் அலுவலகம், வீடு, கடைகள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது. ஒரு வருமான வரித்துறை அதிகாரி தன்னை அதீத சோதனைக்கு உள்ளாக்கிவிட்டதாக தன் கடைசி கடிதத்தில் தெரிவித்து இருந்தார் சித்தார்த்தா. இதனையடுத்து வருமான வரித்துறை இதற்கு பதில் அளித்தது. தான் கறுப்பு பணம் வைத்திருந்ததை சித்தார்த்தாவே ஒப்புக்கொண்டுள்ளார் என வருமான வரித்துறை கூறியது.

சித்தார்த்தா உடல் எவ்வாறு கண்டெடுக்கப்பட்டது?

இன்று அதிகாலை 7 மணிக்கு மீனவர் ரித்தேஷ், ஹோகி பஜார் அருகே மீன் பிடிக்கத் தன் விசைப்படகை தயார் செய்துகொண்டிருந்தாகக் கூறுகிறார். நேத்ராவதி ஆற்றில் 25 அழம் உள்ள இடங்கள் எல்லாம் உள்ளன. இந்நிலையில் வெறும் 8 அடி அழம் கொண்ட பகுதியில் பொருள் ஒன்று மிதப்பதுபோல அவருக்குத் தெரிந்துள்ளது.

Video: நேத்ராவதி ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட காஃபி டே உரிமையாளரின் உடல்

பின்னர் சற்று அருகில் சென்று பார்த்தபோது அது மனித உடல் எனத் தெரியவந்தது. ஆனால் அது சித்தார்த்தாவின் உடல் என மீனவர் ரித்தேஷ் நினைக்கவில்லை. படகின் அருகில் சென்று பார்த்த பின்னரே அது சித்தார்த்தாவின் உடல் என உறுதி செய்துகொண்டு, உடனே போலீஸாருக்குத் தகவல் அளித்தார். சித்தார்த்தா உடலை கடந்த ஒன்றரை நாட்களாக தேடும்பணியில் காவலர்கள், மீட்பு பணியினர் ஈடுபட்டு வந்த நிலையில் இறுதியாக ஓர் மீனவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி