ஆப்நகரம்

தெலங்கானா என்கவுன்ட்டர் நடந்த கதை!

தெலங்கானாவில் என்கவுன்ட்டர் எப்படி நடந்தது என்பதை தெலங்கானா காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்குகிறார்...

Samayam Tamil 6 Dec 2019, 5:43 pm
தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தெலங்கானா காவல் துறை என்கவுன்ட்டர் செய்தது. நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்த என்கவுன்ட்டரைப் பாராட்டி வருகின்றனர்.
Samayam Tamil kalaignarseithigal


இந்நிலையில் என்கவுன்ட்டர் சம்பவம் எப்படி நடந்தது என்பதை தெலங்கானா காவல் ஆணையர் சஜ்ஜனார் சற்று நேரத்திற்கு முன், பத்திரிகை முன்னிலையில் விளக்கம் அளித்தார். சஜ்ஜனார் கூறியதாவது:

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை அளிக்கப்படாது: ராம்நாத் கோவிந்த் பேச்சு

கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் முகமது பாஷா, நவீன், சிவா, கேசவலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினோம்.

நீதிபதி குற்றம் சாட்டப் பட்டவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அதன்பின், கடந்த 2ஆம் தேதி, காவல் துறை விசாரணைக்கு நீதிபதி அனுமதியளித்தார். காவல் துறை விசாரணைக்காக 10 நாட்கள் வழங்கப்பட்டிருந்தது.



நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தனித்தனியாக நேற்று, நேற்று முன் தினம் விசாரணை நடத்தினோம். விசாரணையின்போது மழுப்பலாகவே குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதிலளித்தனர். பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட எரித்து கொல்லப்பட்ட கால் நடை மருத்துவரின் செல்போனை கைப்பற்ற, கொலை நடந்த இடத்துக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் குற்றவாளிகளை அழைத்து சென்றோம்.

ஆள்நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதாலே காலை அழைத்து சென்றோம். சம்பவ இடத்துக்கு சென்றது. 4 பேரும் எங்களிடம் முறையாக நடந்து கொள்ளாமல், அலக்கழித்தனர். அப்போது குற்றம் சாட்டப் பட்டவர்களில் 2 பேர் துப்பாக்கியை எடுத்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போதுகூட காவலர்கள் அவர்களை சரணடையக் கூறி பேச்சுவார்த்தை நடத்தினார். எங்கள் தரப்பு கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லை.

தெலங்கானா என்கவுன்ட்டர் சரியா? வீடியோ பதிவு!!

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் நாங்கள் சுட்டு வீழ்த்தினோம். நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இந்த சம்பவம் சுமார் காலை 5.45 மணியிலிருந்து 6 மணிக்குள் நடந்திருக்கும். குற்றவாளிகள் எங்கள் மீது நடத்திய தாக்குதலில் எஸ் வெங்கடேஸ்வர், தலைமைக் காவலர் அரவிந்த் ஆகியோர் காயமடைந்தனர்.

அதே வேளையில் கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவரின் செல்போன் கைப்பற்றப்பட்டுவிட்டது. இப்போது என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட 4 பேர் மீது பல்வேறு மாநிலங்களில் நடந்த பாலியல் வன்புணர்வு வழக்குகளில் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி