ஆப்நகரம்

இந்தியாவில் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா: 7 நாட்களில் இத்தனை பேர் பாதிப்பா!

இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது

Samayam Tamil 5 Jan 2021, 3:45 pm
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை கொரோனாவுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை போடும் பணிகளை விரைவில் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருவதற்கிடையே, ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கொரோனா வைரஸுக்கு VUI 202012/1 என்று பெயரிடப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுள்ளது. இங்கிலாந்தில் மரபியல் மாற்றம் அடைந்திருக்கும் கொரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

பிரிட்டனில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் இந்திய அரசு பிறப்பித்துள்ளது. நவம்பர் 25ஆம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அனைத்து பயணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளால் தொடர்புகொண்டு அவர்களது உடல்நிலைக் குறித்து கண்காணிக்கப்படும். பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து பயணிகளின் சளி மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது வரை மொத்தம் 58 பேருக்கு மரபணு மாற்றம் பெற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி பிரசாதம் குறித்து ஆச்சரியம்; பக்தர்கள் செம ஹேப்பி!

கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் முறையாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 6 பேருக்கு மரபணு மாற்றம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மரபணு மாற்றம் பெற்ற கொரோனா கண்டறியப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 7 நாட்களில் மட்டும் இந்த தொற்று 51 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி