ஆப்நகரம்

எத்தனை கோடி தெரியுமா? பிரம்மோற்சவ வசூலில் களைகட்டிய திருப்பதி கோயில்!

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் திருப்பதி கோயிலில் உண்டியல் வசூல் குறித்து விரிவாக காணலாம்.

Samayam Tamil 28 Oct 2020, 10:06 am
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். இவர்கள் அளிக்கும் காணிக்கையால் உலகின் பணக்கார கடவுளாக ஏழுமலையான் திகழ்ந்து வருகிறார். பணம், நகை மட்டுமல்லாது தங்கள் சொத்துகளையும் எழுதி வைத்து விடுகின்றனர். இதன்மூலம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏழுமலையானுக்கு சொத்துக்கள் இருக்கின்றன.
Samayam Tamil how much hundi collection in tirupati temple for navaratri brahmotsavam
எத்தனை கோடி தெரியுமா? பிரம்மோற்சவ வசூலில் களைகட்டிய திருப்பதி கோயில்!


காஷ்மீரில் ’திவ்யஷேத்ரா’

இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. உலகின் வேறெங்கும் இப்படியொரு சுவையை பெற முடியாது. இதற்காக திருப்பதி மலை ஏறி வருபவர்களும் இருக்கின்றனர். திருப்பதி திருமலை கோயில் போன்று வட இந்தியாவிலும் பிரம்மாண்ட கோயில் ஒன்றை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி ஜம்மு காஷ்மீரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு “திவ்யஷேத்ரா” என்று பெயரிடப்பட்டுள்ளது.

திருமலையில் கொரோனா ஊரடங்கு

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் ஏழுமலையான் பக்தர்களையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு திருமலையிலும் அமலுக்கு வந்தது. இருப்பினும் ஏழுமலையானுக்கு தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து போதிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் உடன் கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்; திருப்பதியில் கோலாகலம்!

கட்டண தரிசனம் மட்டும் அனுமதி

தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு மாற்றங்களை தேவஸ்தான நிர்வாகம் செய்தது. இலவச தரிசனம் மூலம் ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்து விடுவதால் கட்டண தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ரூ.300 முதல் டிக்கெட்கள் விற்கப்பட்டு, அதன்மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் படிப்படியாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இலவச தரிசனம் எப்போது?

ஆனால் இலவச தரிசனம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுபற்றி அடுத்த சில நாட்களில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி தெரிவித்துள்ளார். இங்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. ஆன்லைன் வாயிலாக 300 ரூபாய் டிக்கெட் பெற்று வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நவராத்திரி பிரம்மோற்சவ விழா

ஏழுமலையான் வீற்றிருக்கும் ராஜ கோபுர கோயிலைச் சுற்றியுள்ள கேலரிகளில் 7 ஆயிரம் பேருக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடந்த விழா நேற்று நிறைவு பெற்றது. வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை புரிவர். ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


ஒவ்வொரு கோயிலுக்கும் சர்ப்ரைஸ் - திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

உண்டியல் வசூல் எவ்வளவு?

அதன்படி நவராத்திரி திருவிழா நடந்த ஒன்பது நாட்களில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 50 ஆயிரத்து 791 பேர் தலைமுடி காணிக்கை அளித்தனர். இவர்கள் ஏழுமலையானுக்கு அளித்த காணிக்கையால் 12 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உண்டியல் வசூலாகியுள்ளது.

அடுத்த செய்தி