ஆப்நகரம்

குஜராத் தேர்தலுக்கும், பாகிஸ்தானுக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்? மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி!

குஜராத் தேர்தலில், பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக பிரதமர் மோடி எப்படி கூறலாம் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 13 Dec 2017, 1:02 pm
டெல்லி: குஜராத் தேர்தலில், பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக பிரதமர் மோடி எப்படி கூறலாம் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil how should pakistan is interfered in gujarat elections asks prakash raj
குஜராத் தேர்தலுக்கும், பாகிஸ்தானுக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்? மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி!


சமீப காலங்களாக நடிகர் பிரகாஷ்ராஜ் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், குஜராத் தேர்தல் தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அதில், நம்முடைய எதிரி நாடு, நம் நாட்டு தேர்தலில் தலையிடுவதாகவும், இங்கு யார் வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்ய திட்டம் தீட்டுவதாகவும் கூறியுள்ளீர்கள்.

இந்த குற்றச்சாட்டு உண்மையானால், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

அதைவிட்டு நாட்டு மக்களிடம் ஏன் குற்றச்சாட்டை கூறுகிறீர்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.

How should Pakistan is interfered in Gujarat Elections asks Prakash Raj.

அடுத்த செய்தி