ஆப்நகரம்

மோடி... மோடி... விண்ணை பிளந்த கோஷம்... உற்சாகமாய் மேடையேறிய பிரதமர்!

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் ஆயிரக்கணக்கானோர் அங்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Samayam Tamil 22 Sep 2019, 10:22 pm
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத்தில் உள்ள என்ஆர்ஜி விளையாட்டரங்கில் நடைபெறும் "ஹவுடி மோடி" நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி இரவு 9:45 மணியளவில் விழா மேடையை வந்தடைந்தார்.
Samayam Tamil hmpm.


அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மோடி...மோடி.. உற்சாகமாக கோஷங்கள் எழுப்பி அவரை வரவேற்றனர். எப்போதும் போல் வண்ணமயமான உடையில் காட்சியளித்த மோடியை, அவர்கள் தங்களது மொபைல்ஃபோனில் படம் பிடித்தனர்.

இந்திய வம்சாவளியினரின் உற்சாக வரவேற்புடன் மேடையை அடைந்த மோடிக்கு, மேடையிலிருந்த ஹூஸ்டன் நகர மேயர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கைகுலுக்கி வரவேற்றனர்.

முன்னதாக, ஹூஸ்டன் மாநகர மேயர் ஸ்டில்வெஸ்டர் டர்னர் விழா வரவேற்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், "உலகின் சக்திவாய்ந்த இரு நாடுகளின் தலைவர்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு அளப்பரியது.

உலக அளவில் அமெரிக்காவுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ள 4-ஆவது மிகப்பெரிய நாடு இந்தியா" என, டர்னர் பெருமித்துடன் தெரிவித்தார். அவரை தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் சிலரும் மோடி வரவேற்று உரையாற்றினர்.

அதைத்தொடர்ந்து, ஹூஸ்டன் மாநகர மேயர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி விளையாட்டரங்கில் நடைபெறும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நேரப்படி இரவு 9:03 மணியளவில், விழா நடைபெறும் இடத்தை வந்தடைந்தார்.

அவரை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 9:22 மணியளவில் விழா அரங்கிற்கு வந்தார். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர், மோடி மற்றும் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விழா ஏற்பட்டாளர்களும், இரு தலைவர்களுக்கும் வண்ணமிகு வரவேற்பை அளித்தனர்.

அடுத்த செய்தி