ஆப்நகரம்

பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு கிளாஸ்தான்... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

பள்ளி மாணவர்களுக்கு ஆன் -லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 14 Jul 2020, 6:16 pm
மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன் -லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.
Samayam Tamil onlie classes


இதுவே 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு பாடத்துக்கு 45 நிமிடங்கள் வீதம் நாள்தோறும் இரண்டு வகுப்புகள் மட்டும் நடத்தப்பட வேண்டும்.

இதேபோன்று 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 4 வகுப்புகள் மட்டுமே ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும். இவர்களுக்கும் ஒரு பாடத்துக்கு 45 நிடமிங்கள் என்றே காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு கிளாஸ்தான்... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

கொரோனா பரவல் தடு்ப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இதுநாள்வரை கொரோனா நோய்த்தொற்றி்ன் தாக்க்ம் இன்னும் குறைந்தபாடில்லை.

இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டிக்கான (2020 -21) பாடங்கள், பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஆன் -லைன் மூலமாகவே அன்றாடம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அமர்நாத் யாத்திரை: உள்ளூர் நிர்வாகம்தான் முடிவெடுக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

தினமும் பல மணி நேரம், மொபைல்ஃபோன் வாயிலாக ஆன் லைன் வகுப்புகளில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று வருவதால் அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், ஆன் லைன் வகுப்புகள் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இ்ன்று வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் அனைத்து மாணவ்ர்களுக்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும் எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி