ஆப்நகரம்

விவசாய நிலங்களை மீட்க, பிரதமருக்கு இரத்தத்தில் கடிதம் எழுதும் விவசாயிகள்!!

வாராணாசியைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்களை மீட்க, இரத்தத்தில் கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

Samayam Tamil 2 Apr 2018, 2:37 pm
வாரணாசி: வாராணாசியைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்களை மீட்க, இரத்தத்தில் கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil இரத்தத்தில் கடிதம் எழுதும் விவசாயிகள்!!
இரத்தத்தில் கடிதம் எழுதும் விவசாயிகள்!!


கடந்த 2003 ஆம் ஆண்டு டிரான்ஸ்போர்ட் நகர் திட்டத்தின் கீழ், வாராணாசி பகுதியைச் சேர்ந்த 1192 விவசாயிகளின் விளைநிலங்களை அரசு எழுதி வாங்கியது. சுமார் 15 வருடங்கள் கழிந்த பின்னும், திட்டம் செயல்படுத்தப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிக்கலுக்கு ஆளானார்கள்.

இதுகுறித்து, தற்போதையை வாரணாசி பாராளுமன்ற உறுப்பினரும், இந்தியாவின் பிரதமருமான மோடியிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வாரணாசியில் பிரதமர் மோடி

இதனால், விவசாயிகள் தங்கள் இரத்தத்தில் கடிதம் எழுதி, வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வாரணாசியில் இருக்கும் பாராளுமன்ற அலுவலகத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, நேற்று மட்டும் இதற்காக 50 விவசாயிகள் தங்கள் இரத்தத்தால் கடிதம் எழுதி வைத்துள்ளனர்.

நாட்டின் பிரதமரான மோடியின் தொகுதியிலேயே விவசாயிகள் இத்தைகைய கொடுமையை அனுபவிப்பது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அடுத்த செய்தி