ஆப்நகரம்

யார் அந்த குரேஷி? : கேரளா இளைஞர்களை ஐஎஸ் அமைப்பிற்கு சேர்த்தவரா?

பங்களாதேஷ், டாகா உணவு விடுதியில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில அந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஜகிர் நாயகின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையில் இருந்தவரா என சந்தேகம் எழுதுள்ளது.

TOI Contributor 20 Jul 2016, 3:01 pm
டெல்லி : பங்களாதேஷ், தாகா உணவு விடுதியில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில அந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஜகிர் நாயகின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையில் இருந்தவரா என சந்தேகம் எழுதுள்ளது.
Samayam Tamil hunt on for qureshi who made kerala youth join is
யார் அந்த குரேஷி? : கேரளா இளைஞர்களை ஐஎஸ் அமைப்பிற்கு சேர்த்தவரா?


குரேஷி என்ற நபர் கேரளா இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு சேர்த்ததாக சந்தேகிக்கப்பட்டு வரும் நிலையில் அவரை பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் உளவு அமைப்பினர் திணறி வருகின்றனர். குரேஷியின் மும்பை முகவரி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அதற்கான எந்த ஒரு தடையமும் கிடைக்காத்தாலும், அவரின் புகைப்படம் இல்லாமல் தேடி வருகிறது. இந்நிலையில் ஜகிர் நாயகின் போதனைகள் முஸ்லீம்களை தீவிரவாதத்திற்கு ஆதரவாக மாற்றக்கூடிய வகையில் கருத்து தெரிவித்ததாக தீவிரவாத தடுப்பு அமைப்பு கூறியுள்ளது. இவர் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்திவருகிறார்.

இந்த அறக்கட்டளையில் இருந்ததாக கருதப்படும் எபின் ஜேக்கப் என்ற 17 வயது கேரள இளைஞன், குரேஷியால் அடையாளம் காணப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாகவும், ஜேக்கப் தான் பங்களாதேஷில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தற்போது இந்திய உளவு அமைப்பு சந்தேகமடைந்துள்ளது.

இதனால் ஜேக்கப் மற்றும் ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் குரேஷி என்பவரையும் உளவுத்துறை தீவிரமாக தேடி வருகிறது.

அடுத்த செய்தி