ஆப்நகரம்

அண்ணன் - தம்பிக்குள் மனைவி மாற்றம்: மறுப்பு தெரிவித்த அண்ணனின் மனைவி கொலை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தம்பிக்கு மனைவியாக இருக்க மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Blogger - Sivakasi Samayal 7 Dec 2018, 6:01 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தில், தம்பிக்கு மனைவியாக இருக்க மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil police 2.


உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (23). இவரது கணவர் விஷால். இவருக்கு தம்பியான யோகேந்திராவின் மனைவி சோனு மீது காதல் ஏற்பட்டுள்ளது. அதே போன்று தம்பிக்கோ லட்சுமியின் மீது காதல். இதனால், அண்ணனும் – தம்பியும் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி, விஷாலின் மனைவி லட்சுமியை தம்பிக்கும், யோகேந்திராவின் மனைவி சோனுவை அண்ணனுக்கும் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த முடிவுக்கு லட்சுமி மறுப்பு தெரிவிக்க, எங்க, சோனு தனக்கு கிடைக்காமல் போய்விடுவாளோ என்ற விரக்தியில், யோகேந்திராவுடன் சேர்ந்து விஷால், லட்சுமியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விஷால் மற்றும் யோகேந்திரா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி