ஆப்நகரம்

மோடி பேரணியில் பங்கேற்ற பெண்ணுக்கு தலாக்!

உத்திர பிரதேசத்தில் பிரதமர் மோடியின் பேரணியில் பங்கேற்ற கணவர், மூன்று முறை, தலாக் கூறி, தன்னை விவாகரத்து செய்ததாக, முஸ்லிம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

TNN & Agencies 11 Dec 2017, 12:38 am
பரேலி : உத்திர பிரதேசத்தில் பிரதமர் மோடியின் பேரணியில் பங்கேற்ற கணவர், மூன்று முறை, தலாக் கூறி, தன்னை விவாகரத்து செய்ததாக, முஸ்லிம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil husband gives talaq because of participating modi meeting blames wife
மோடி பேரணியில் பங்கேற்ற பெண்ணுக்கு தலாக்!


உத்தர பிரதேசத்தில், பாரதிர ஜனதாவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்நிலையில் பரேலியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் பைரா. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பேரணியை காணச் சென்ற கணவர் தானிஷ், மூன்று முறை தலாக் கூறி, தன்னை விவாகரத்து செய்ததாகவும், குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பைரா மேலும் கூறுகையில்,’ என் கணவர், உறவுக்கார பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளார். இருவருக்கும் குழந்தையும் உள்ளது. அந்த பெண்ணுடன் வாழ வசதியாக, என்னை விவாகரத்து செய்ய காரணம் தேடினார். பிரதமர் மோடி பங்கேற்ற பேரணிக்கு சென்ற காரணம் கூறி, மூன்று முறை தலாக் கூறி, என்னை விவாகரத்து செய்துவிட்டார்.’ என்றார்.

எனினும், பைராவின் குற்றச்சாட்டை தானிஷ் மறுத்துள்ளார். அவ்வாறு செய்யவில்லை என்றும், பைரா, வேறு ஒருவருடன் கள்ள காதல் வைத்துளார், அதை மறைக்க, தன் மீது குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளார்.

husband gives talaq because of participating modi meeting blames wife

அடுத்த செய்தி