ஆப்நகரம்

ஹரியானாவில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: மனைவியை பலாத்காரம் செய்ய வைத்த கணவர்

நண்பர்கள் மூலமாக மனைவியை பலாத்காரம் செய்ய வைத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 31 Jul 2017, 3:06 pm
நண்பர்கள் மூலமாக மனைவியை பலாத்காரம் செய்ய வைத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil husbands 3 friends gangrape woman following his directions in haryana
ஹரியானாவில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: மனைவியை பலாத்காரம் செய்ய வைத்த கணவர்


ஹரியானா மாநிலம் சிர்ஷா பகுதியைச் சேர்ந்த பெண்ணை அவரது கணவர் நண்பர்களை வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 29ம் தேதி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ஹரியானாவின் சிர்ஷா பகுதியைச் சேர்ந்த பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்ய விரும்பியுள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, தனது நண்பர்கள் 3 பேர் உதவியுடன் ஆனால், அப்பெண் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால், ஆத்திரம் அடைந்த கணவர் தனது நண்பர்கள் 3 பேரை அழைத்து மனைவியை பாலியல் பலாத்காரம் செய்யமாறு தெரிவித்துள்ளார். இதனையறிந்த அப்பெண் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால், அப்படியும் கணவரின் நண்பர்கள் அவரை விடவில்லை. துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு நிர்வாணமாக சாலையில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் பலாத்காரம் செய்த கணவரின் நண்பர்கள் உள்பட 6 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

A woman from Haryana's Sirsa on Saturday alleged that she was raped by three men on her husband's directions.

அடுத்த செய்தி