அப்படி என்ன ஸ்பெஷல்? - ரூ.19 லட்சத்திற்கு ஏலம் போன லட்டு!
லட்டு ஒன்று, 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது, பேசும் பொருளாக அமைந்துள்ளது
Samayam Tamil 20 Sep 2021, 8:04 pm
ஹைலைட்ஸ்:
- ரூ. 18.90 லட்சத்திற்கு ஏலம் போன லட்டு
- லட்டை ஏலத்திற்கு எடுத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற ஏலத்தில், லட்டு ஒன்று 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. தெலங்கானா மாநிலத் தலைநகர், ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள பாலாபூரில், பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாளில், விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்படும். இந்த லட்டுக்கு எப்போதுமே பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.
கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த ஆண்டு ஏலம் நடைபெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நடைபெற்றதால், விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு நேற்று ஏலம் விடப்பட்டது. லட்டின் தொடக்க விலையாக, 1 ஆயிரத்து 116 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. கடைசியில், 18 லட்சத்து 90 லட்சம் ரூபாய் என்ற உச்ச விலைக்கு லட்டு ஏலம் போனது. இது, அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி., ரமேஷ் யாதவ், அவரது கூட்டாளி, பாலாபூரைச் சேர்ந்த மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் லட்டை ஏலம் எடுத்தனர். பாலாபூர் விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தெலங்கானா கல்வி அமைச்சர் சபிதா ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் லட்டு ஏலம் விடப்படும் என்றால் குறைந்த தொகைக்கே ஏலம் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த ஆண்டு ஏலம் நடைபெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நடைபெற்றதால், விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு நேற்று ஏலம் விடப்பட்டது. லட்டின் தொடக்க விலையாக, 1 ஆயிரத்து 116 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. கடைசியில், 18 லட்சத்து 90 லட்சம் ரூபாய் என்ற உச்ச விலைக்கு லட்டு ஏலம் போனது. இது, அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி., ரமேஷ் யாதவ், அவரது கூட்டாளி, பாலாபூரைச் சேர்ந்த மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் லட்டை ஏலம் எடுத்தனர். பாலாபூர் விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தெலங்கானா கல்வி அமைச்சர் சபிதா ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் லட்டு ஏலம் விடப்படும் என்றால் குறைந்த தொகைக்கே ஏலம் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.