ஆப்நகரம்

தெருநாய்களுக்கு இரையாகிய பச்சிளம் குழந்தை

ஹைதராபாத் அருகே விகரபாத் ஆர்டிசி பேருந்து நிலையத்தில் கிடந்த 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் கடித்துக் குதறி கொன்றது.

TNN 12 Sep 2016, 10:29 am
ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே விகரபாத் ஆர்டிசி பேருந்து நிலையத்தில் கிடந்த 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் கடித்துக் குதறி கொன்றது.
Samayam Tamil hyderabad dogs kill newborn girl eat her body
தெருநாய்களுக்கு இரையாகிய பச்சிளம் குழந்தை


கடந்த சனிக்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் தங்கிய 2 பெண்கள் குழந்தையை இங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். பாதுகாப்பின்றி தனியாக கிடந்த குழந்தையை அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் கூட்டமாக சூழ்ந்து கடித்துக் குதறியுள்ளது.

அப்போது, குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த மக்கள் ஓடி வந்து நாய்களை விரட்டியடித்தனர். எனினும், குழந்தையை நாய்கள் கடித்து, பாதி உடலை தின்றுவிட்டதால் குழந்தை உயிரிழந்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விகரபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி