ஆப்நகரம்

ஹைதராபாத் என்கவுன்டர்: அறிக்கை கேட்கும் உள்துறை அமைச்சகம்!

திஷா கூட்டு பாலியல் வன்கொடுமை கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

Samayam Tamil 6 Dec 2019, 1:31 pm
டெல்லி: ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக தெலங்கானா மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்க அறிக்கை கேட்டுள்ளது.
Samayam Tamil என்கவுண்டர் நடந்த இடம்
என்கவுண்டர் நடந்த இடம்


தெலங்கானா மாநிலம் மெஹபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான கால்நடை பெண் மருத்துவர், பணி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மர்மநபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், பெண் மருத்துவரை சுங்கச்சாவடி அருகே உள்ள புதரில் தள்ளிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்ட போது, அப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால், அவரது வாயில் மதுவை ஊற்றி மயக்கமுற செய்து பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் எரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

என்கவுண்டர்: போலீஸாரை கொண்டாடும் பொது மக்கள்!

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்த வழக்கை விரைந்து விசாரிக்கும் பொருட்டு விரைவு நீதிமன்றத்துக்கு வழக்கின் விசாரணையை மாற்ற அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டிருந்தார்.

என்கவுன்ட்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்?

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பாஷா, நவீன், சிவா, கேசவலு ஆகிய 4 பேரும் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் குற்றம் நடந்தது எப்படி என நடித்துக்காட்டச் சொல்லிய போது, நால்வரும் கற்களைக் கொண்டு காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சித்த போது, அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்!

இந்த நிலையில், ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக தெலங்கானா மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்க அறிக்கை கேட்டுள்ளது.

அடுத்த செய்தி