ஆப்நகரம்

மனைவியை பிரிந்த சோகம்: கணவன் தற்கொலை

மனைவியை பிரித்து சென்ற சோகம் தாங்காமல் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Apr 2017, 4:36 pm
மனைவியை பிரித்து சென்ற சோகம் தாங்காமல் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil hyderabad wife goes back cab driver ends life
மனைவியை பிரிந்த சோகம்: கணவன் தற்கொலை


தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி கெசம்பெட் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்தர் ரெட்டி. இவர் ஹைதராபாத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவருடைய உறவுக்கார பெண்ணான சரவந்தியை காதலித்து பெற்றோர் அனுமதியில்லாமல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் கெசம்பெட் பகுதியில் வசித்து வந்தனர். கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து சரவந்தி அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். இதில், அவர் திருமணம் செய்து கொண்டது சரவந்தியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில், சரவந்தியிடம் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, அவரது மனதை மாற்றி மகேந்தர் ரெட்டியை பிடிக்காதது போல் செய்துள்ளனர். அதன் பிறகு ரெட்டி அங்கு சென்று மனைவியை தன்னுடன் வரச்சொல்லி ஊர் பஞ்சாயாத்திடம் முறையிட்டுள்ளார்.

ஆனால், சரவந்தி மகேந்தர் ரெட்டி தவறான பழக்கம் வைத்திருக்கிறார். அதனால், அவருடன் நான் போக மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் தொடர்ந்து மன வருத்தத்தில் இருந்த மகேந்தர் ரெட்டி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மகேந்தர் ரெட்டியின் சகோதரர் கிரண் குமார் ரெட்டி, காவல் நிலையத்தில் இந்த தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி