ஆப்நகரம்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பில்லை: மத்திய அரசு விளக்கம்

நெடுவாசலில் நடைபெற உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

TNN 27 Feb 2017, 4:59 pm
டெல்லி: நெடுவாசலில் நடைபெற உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Samayam Tamil hydro carbon project wont be make any impact in tamilnadu says central govt
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பில்லை: மத்திய அரசு விளக்கம்


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை, மிகக்குறைவான நிலப்பரப்பே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. அதனால் நிலத்தடி நீருக்கு பாதிப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள எண்ணெய் கிணறுகளால் விவசாயம் பாதிக்கவில்லை என்று கூறியுள்ளது. சுமார் 500 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழக அரசுக்கு ரூ.40 கோடி ராயல்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் விளக்கத்தை நெடுவாசல் பகுதி விவசாயிகள் மற்றும் போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கூறியுள்ளனர்.

Hydro Carbon Project wont be make any impact in Tamilnadu says Central Govt.

அடுத்த செய்தி