ஆப்நகரம்

Rahul Gandhi: மோடி மீண்டும் பிரதமராகும் பேச்சுக்கே இடமில்லை – ராகுல் காந்தி

வருகின்ற நாடாளுமன்ற தோ்தலில் பா.ஜ.க. 230 இடங்களைக்கூட கைப்பற்றப் போவதில்லை. எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகும் பேச்சுக்கே இடமில்லை என்று ராகுல் காந்தி தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 14 Aug 2018, 5:21 pm
வருகின்ற நாடாளுமன்ற தோ்தலில் பா.ஜ.க. 230 இடங்களைக்கூட கைப்பற்றப் போவதில்லை. எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகும் பேச்சுக்கே இடமில்லை என்று ராகுல் காந்தி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Rahul Gandhi 1


காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி ஐதராபாத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். சுற்றுப்பயணத்தின் போது பத்திாிகை ஆசிரியா்களுடன் சந்திப்பு மேற்கொண்டா்ா. அப்போது அவா் பேசுகையில், வருகின்ற நாடாளுமன்ற தோ்தலில் பா.ஜ.க. 230 இடங்களைக்கூட பெறப்போவதில்லை. எனவே, மோடி மீண்டும் பிரதமராகும் பேச்சுக்கே இடமில்லை. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் கூட்டணி காரணமாக பா.ஜ.க.வின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

காங்கிரஸ் கட்சியும் மற்ற பா.ஜ.க. அல்லாத கட்சிகளும் பொரும்பான்மை பெரும்போது யாா் பிரதமராவாா் என்பதை கூட்டணியில் இருப்பவா்கள் முடிவு செய்வாா்கள்.

கட்சியின் மாநிலக் குழுக்களை பொறுத்தவரை, ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் முரண்பாடுகள் எதுவும் இல்லை. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தொிவித்தாா்.

மேலும், ராகுல் காந்தியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டேன்.

நாட்டில் சிகிப்பின்மை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. சிறுபான்மையினா் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனா். ஆண்டுதோறும் இரண்டு கோடி பேருக்கு வேலைகள் வழங்குவதாக கூறிய மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டாா்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு 458 பேருக்கு வேலை வாய்ப்பு என்றுள்ள நிலையில் சீனாவோ ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதைப் பாா்க்க முடிகிறது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீா்வு காணவும் வேலையில்லாதவா்களுக்கு வேலை வழங்கவும் நாம் உறுதியேற்போம் என்று ராகுல் காந்தி தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி