ஆப்நகரம்

எதுக்கு தனியாக திராவிட நாடு? ஒற்றுமை குறித்து கேள்வி எழுப்பும் நக்மா

திராவிட நாடு என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா கூறியுள்ளார்.

TNN 29 May 2017, 1:44 pm
சென்னை: திராவிட நாடு என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா கூறியுள்ளார்.
Samayam Tamil i am not accept the concept of dravida nadu says nagma
எதுக்கு தனியாக திராவிட நாடு? ஒற்றுமை குறித்து கேள்வி எழுப்பும் நக்மா


இதுதொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், ஒருபுறம் மாட்டுக்கு பாதுகாப்பு அளிக்க நினைக்கும் மத்திய அரசு, மனிதர்களை ரோட்டில் போட்டு சாகடிப்பதாக குற்றம்சாட்டினார். இது முறையற்ற செயல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் எதைச் சாப்பிட வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு யார் கொடுத்தது? என்று கேள்வி எழுப்பினார்.

3 ஆண்டு சாதனையை கொண்டாட பாஜகவிற்கு தகுதியில்லை என்றும், கால்நடைகளை காப்பதாக கூறி சில அமைப்புகள் நடத்தும் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் திராவிட நாடு என்பதில் தனக்கு உடன்பாடில்லை என்றும், நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நக்மா வலியுறுத்தினார்.

I am not accept the concept of Dravida Nadu says Nagma.

அடுத்த செய்தி