ஆப்நகரம்

புதுசா சட்டம் வரும்; மூடநம்பிக்கையை ஒழிக்க களமிறங்கும் சித்தராமையா...!

ஜோதிடத்தின் மீது தனக்கு நம்பிக்கை கிடையாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

TNN 9 Jul 2017, 8:48 am
பெங்களூரு: ஜோதிடத்தின் மீது தனக்கு நம்பிக்கை கிடையாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil i dont believe in astrology says siddaramaiah
புதுசா சட்டம் வரும்; மூடநம்பிக்கையை ஒழிக்க களமிறங்கும் சித்தராமையா...!


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மூடநம்பிக்கையை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கை தடை சட்டம் அமலில் உள்ளதை போல், கர்நாடகாவிலும் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டார். மூடநம்பிக்கையை சிறுவயதில் இருந்தே தான் எதிர்த்ததாகவும், அதற்கு உதாரணமாக தான் ராகு காலத்தில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

அதேபோல் பட்ஜெட்டையும் ராகு காலத்தில் தாக்கல் செய்ததாக கூறினார். மூடநம்பிக்கையை ஒழிப்பதே அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார். ஜோதிடம் ஒன்றின் மூலம் மட்டுமே நல்லது நடக்காது என்பதை மக்கள் உணர வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.

I dont believe in Astrology says Siddaramaiah.

அடுத்த செய்தி