ஆப்நகரம்

எந்த நாட்டு குடியுரிமையும் கோரவில்லை: ராகுல்

நான் எந்த நாட்டு குடியுரிமையும் கோரவில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

TNN 25 Mar 2016, 4:04 pm
புதுதில்லி: நான் எந்த நாட்டு குடியுரிமையும் கோரவில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Samayam Tamil i never requested any countrys citizenship rahul
எந்த நாட்டு குடியுரிமையும் கோரவில்லை: ராகுல்


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர், என சமீபத்தில் தகவல் வெளியானது. இதுபற்றி உரிய ஆவணங்களுடன், பாஜக., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, கடந்த நவம்பர் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதனையடுத்து, பாஜக எம்.பி மகேஷ் கிரி இதுகுறித்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதினார். அதன்பேரில், விசாரணை நடத்தும்படி அத்வானி தலைமையிலான நடத்தை கண்காணிப்புக் குழுவுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த குழுவினர், அண்மையில் விளக்கம் கேட்டு, ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், நான் எந்த நாட்டு குடியுரிமையும் கோரவில்லை என இந்த குழுவிடம் ராகுல் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அடுத்த செய்தி