தவங்கரே (கர்நாடகா): நாட்டை தவறான பாதைக்கு அழைத்து செல்ல மாட்டேன் என பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் தவங்கரேவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாட்டு மக்கள் தேவையில்லாத பல சட்டங்களால் கடும் துன்பப்படுகின்றனர். அதுபோன்ற 1,200 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.
பெரிய விஷயங்கள் எதையும் நான் செய்யவில்லை என விமர்சிக்கின்றனர். முந்தைய அரசாங்கம் பெரிய விஷயங்களை பெரிய மக்களுக்கு மட்டுமே செய்தது. அதன் மூலம் மிகப் பெரிய ஆதாயத்தை அடைந்தது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்துள்ளேன். அவர்களிடம் வறட்சியை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளேன்.
Should I commit the same sin? Should I move on the wrong path? PM Narendra Modi in Karnataka pic.twitter.com/RqBoSV6ABc— ANI (@ANI_news) May 29, 2016
உங்களை போன்ற மக்கள் அன்பையும், அரவணைப்பும் எனக்கு தரும் போது, தவறான பாதையில் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாட்டை தவறான பாதைக்கு அழைத்து செல்ல மாட்டேன் என்று உறுதி அளித்தார்.
You don't even get a cup of tea for Rs 1 today, used to get it when I used to sell tea. Today, ppl can get life insurance schemes at Rs1- PM— ANI (@ANI_news) May 29, 2016
இன்று உங்களால் ஒரு ரூபாய்க்கு டீ வாங்க முடியாது. நான் டீ விற்ற போது வாங்க முடியும். ஆனால், இன்று ரூ.1-க்கு, மக்கள் காப்பீடு பெற்றுள்ளனர். இதனால் பலர் பயன்பெற்றுள்ளனர். தூய்மை இந்தியா திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தவங்கரேவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாட்டு மக்கள் தேவையில்லாத பல சட்டங்களால் கடும் துன்பப்படுகின்றனர். அதுபோன்ற 1,200 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.
பெரிய விஷயங்கள் எதையும் நான் செய்யவில்லை என விமர்சிக்கின்றனர். முந்தைய அரசாங்கம் பெரிய விஷயங்களை பெரிய மக்களுக்கு மட்டுமே செய்தது. அதன் மூலம் மிகப் பெரிய ஆதாயத்தை அடைந்தது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்துள்ளேன். அவர்களிடம் வறட்சியை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளேன்.
Should I commit the same sin? Should I move on the wrong path? PM Narendra Modi in Karnataka pic.twitter.com/RqBoSV6ABc— ANI (@ANI_news) May 29, 2016
உங்களை போன்ற மக்கள் அன்பையும், அரவணைப்பும் எனக்கு தரும் போது, தவறான பாதையில் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாட்டை தவறான பாதைக்கு அழைத்து செல்ல மாட்டேன் என்று உறுதி அளித்தார்.
You don't even get a cup of tea for Rs 1 today, used to get it when I used to sell tea. Today, ppl can get life insurance schemes at Rs1- PM— ANI (@ANI_news) May 29, 2016
இன்று உங்களால் ஒரு ரூபாய்க்கு டீ வாங்க முடியாது. நான் டீ விற்ற போது வாங்க முடியும். ஆனால், இன்று ரூ.1-க்கு, மக்கள் காப்பீடு பெற்றுள்ளனர். இதனால் பலர் பயன்பெற்றுள்ளனர். தூய்மை இந்தியா திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.