ஆப்நகரம்

ஊடகங்களை சந்திக்க நான் அஞ்சியதில்லை: மன்மோகன் சிங்!

பிரதமராக இருந்தபோது ஊடகங்களை சந்திக்க அஞ்சவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 19 Dec 2018, 1:29 pm
பிரதமராக இருந்தபோது ஊடகங்களை சந்திக்க அஞ்சவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர்பிரதமர் மோடியைவிமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil p


முன்னாள் பிரதமர்மன்மோகன்சிங் எழுதிய ’சேஞ்சிங் இந்தியா’ புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வின்போது அவர் பேசுகையில் ‘ நான்ஏதேச்சையாகபிரதமராக்கப்பட்டேன் என்று தொடர்ந்துபலர் சொல்கின்றனர். ஆனால் நான் நிதி அமைச்சர் ஆனதுகூட விபத்துதான். நான் பிரதமராக இருந்தபோது அமைதியாக இருந்தேன் என்று பலர் தெரிவிக்கின்றனர். ஆனால் நான் பிரதமராக இருந்தபோது ஊடகத்தைசந்திக்க ஒருபோதும் பயந்தது கிடையாது. எனது எல்லா வெளிநாட்டு பயணங்களுக்கும் முன்பும்ஊடகத்தை சந்தித்திருக்கிறேன்.

அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்குமான உறவு கணவன் மனைவியை போன்றது. பிரச்சனைகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். ஆனால் வேறுபாடுகளுக்கான தீர்வுஇருவரையும் பாதிக்காதபடி இருக்க வேண்டும். அப்போதுதான் இணைந்து செயல்பட முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி