ஆப்நகரம்

“பூட்ஸ் காலால் எட்டி மிதித்து விடுவேன்” மிரட்டல் விடுத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன்

கா்நாடகா மாநில காலரை தகாத வாா்த்தைகளால் திட்டிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரின் மகன் அருண் கர்ஜோல் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Samayam Tamil 18 Jul 2018, 12:44 am
கா்நாடகா மாநில காலரை தகாத வாா்த்தைகளால் திட்டிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரின் மகன் அருண் கர்ஜோல் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Samayam Tamil Arun Karjol


கா்நாடகா மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிப்பவா் கோவிந்த் கர்ஜோல். இவரது மகன் அருண் கர்ஜோல் திங்கள் கிழமை தனது வாகனத்தில் வெளியில் சென்றுள்ளாா். அப்போது நோ பாா்க்கிங்கில் தனது வாகனத்தை நிறுத்தி உள்ளாா். இதனை பாா்த்த காவலா் ஒருவா் இங்கு ஏன் வாகனத்தை நிறுத்துகிறீா்கள். இங்கே வாகனத்தை நிறுத்தக் கூடாது என்று தொிவித்துள்ளாா்.

இதனை கேட்டு கடும் ஆத்திரத்திற்கு உள்ளான அருண் கர்ஜோல் காவலரை ஆபாசமாக திட்டத் தொடங்கியுள்ளாா். மேலும் உன்னை பூட்ஸ் காலால் மிதித்து விடுவேன். என்று கூறிவிட்டு ஆபாசமான வாா்த்தைகளால் திட்டியுள்ளாா். இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. வீடியோ கட்சிகளின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினரின் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. சோதனை உறுதி செய்யப்படும் பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவா் மீது நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி