ஆப்நகரம்

India Pakistan War: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்திற்கு முழு உஷார் நிலை- போர் பதற்றம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம் மீது இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ராணுவத்திற்கு முழு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Feb 2019, 11:31 am
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம் மீது இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ராணுவத்திற்கு முழு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil army


ஜம்மு காஷ்மீர் புல்வாமா தக்குதல் நடத்தியதை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் இந்தியா இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படையின் 21 மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் சுமார் 1000 கிலோ எடை வெடிபொருள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

இதில் சுமார் 200 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி இந்தியா பதிலடி

ராணுவத்திற்கு உயர் எச்சரிக்கை:
இந்தியாவின் விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாகிஸ்தான் ஒருவேளை தக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், இந்திய ராணுவத்திற்கு கவனமாக முழு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.


பாக்., பயங்கரவாதிகளை அழித்த மிராஜ்2000 விமானம் பற்றிய முழு தகவல்கள்..!

அடுத்த செய்தி