ஆப்நகரம்

விடுப்பு எதற்கு? வேலை இருக்கு- கைக்குழந்தையுடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி!

தனது ஒருமாதக் குழந்தையுடன் பெண் ஐஏஏஸ் அதிகாரி ஒருவர் பணிக்கு திரும்பியுள்ள சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Apr 2020, 11:22 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளை செயல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் பலரும் தங்கள் விடுமுறை, விடுப்புகளை உதறித் தள்ளிவிட்டு பணியாற்றி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனாவின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் ஓய்வை களைந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டிய தருணம் என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் விதைத்துள்ளது.
Samayam Tamil விசாகப்பட்டினம் ஐஏஎஸ் அதிகாரி


அப்படியென்ன செய்துள்ளார் என்று இனி காணலாம். 2013ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர் ஸ்ரீஜனா. இவருக்கு சமீபத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதற்கடுத்த சில நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் அரசு விதிமுறைகளின்படி ஸ்ரீஜனாவிற்கு 6 மாதங்கள் விடுப்பு அளிக்கப்பட்டது.

ஊரடங்கில் என்.ஜி.ஓக்களின் சேவை; மாநில அரசுகளை வியக்க வைத்த செயல்பாடுகள்!

அதனை மறுத்துவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். தனது அலுவலகத்தில் ஒருமாத கைக்குழந்தை உடன் பணி செய்து வருகிறார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து கொண்டிருக்கின்றனர். தனது வழக்கறிஞர் கணவர் மற்றும் தாயார் உறுதுணையாக இருப்பதாக ஸ்ரீஜனா கூறியுள்ளார். தற்போது நாடு இருக்கும் இக்கட்டான சூழலில் தனது பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது செயலை ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு வெகுவாக பாராட்டியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் முன்னின்று நடத்திக் கொண்டிருப்பதாக கூறியுள்ளது.

"I am sorry” - 500 முறை; வெளிநாட்டு பயணிகளை சுற்றி வளைத்த போலீஸ்!

ஸ்ரீஜனா செயலை பாராட்டி சிகுரு பிரசாந்த் குமார் என்பவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீஜனாவின் செயல் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் ட்விட் செய்துள்ள ஸ்ரீஜனா, தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி, குழந்தைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. மிகவும் பாதுகாப்பான சூழலில் குழந்தைக்கு பாலூட்டி வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி