ஆப்நகரம்

ஐ.எஸ். கொலை மிரட்டலால் துருக்கி அதிபருக்கு கூடுதல் பாதுகாப்பு

இந்தியா வரும் துருக்கி அதிபர் தயிப் எர்டோகனுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க நுண்ணறிவுப்பிரிவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துறைத்துள்ளது.

TNN 30 Apr 2017, 9:38 am
டெல்லி: இந்தியா வரும் துருக்கி அதிபர் தயிப் எர்டோகனுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க நுண்ணறிவுப்பிரிவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துறைத்துள்ளது.
Samayam Tamil ib demands highest security cover for turkish president erdogans india visit in wake of isis threat
ஐ.எஸ். கொலை மிரட்டலால் துருக்கி அதிபருக்கு கூடுதல் பாதுகாப்பு


துருக்கி பிரதமர் தயிப் எர்டோகன் தனது மனைவியான எமைன் எர்டோகனுடன் இன்று டெல்லிக்கு வருகை தருகிறார். இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் அவருக்கு திங்கட்கிழமை ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு மரியாதை அளிக்கப்படும். பின்னர், ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்குச் செல்கிறார். தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்திக்கிறார்.

எர்டோகனின் இந்த பயணத்தின்போது அவருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகனுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க நுண்ணறிவுப் பிரிவினர் பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

எர்டோகன் பயணிக்கும் விமானத்தை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு அளிப்பது, அவர் செல்லும் இடங்கள் அனைத்திற்கும் கூடுதலாக ஆயுதம் தாங்கிய வீரர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை நுண்ணறிவுப்பிரிவினர் கொடுத்திருக்கிறார்கள்.

அடுத்த செய்தி