ஆப்நகரம்

குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பிடிபட்ட இந்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.நா., சபையின் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

Samayam Tamil 18 May 2017, 8:27 am
ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து): பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பிடிபட்ட இந்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.நா., சபையின் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
Samayam Tamil icj to pronounce verdict on kulbhushan jadhav today
குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு


பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறப்பட்டு பிடிபட்ட குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவச் சட்டப் பிரிவு 59-ன் கீழும் அதிகாரபூர்வ ரகசியச் சட்டம் 1923-ன் கீழும் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு, ஜாதவ் தூக்கிலிடப்பட்டால் இருநாட்டு தூதரக உறவுகள் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. அந்நாட்டு தூதரை அழைத்து சம்மன் அளித்ததுடன், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், தூதரக உதவியையும் இந்தியா நாடியது. ஆனால், பாகிஸ்தான் எதற்கும் பணியவில்லை. தூதரக உதவியையும் புறக்கணித்தது.

இதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து, கடந்த 15-ம் தேதியன்று இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.

இந்நிலையில், குல்பூஷன் ஜாதவ் விவகாரம் தொடர்பாக ஐ.நா., சபையின் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்திய நேரப்படி சுமார் 3.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.
ICJ to pronounce verdict on Kulbhushan Jadhav today

அடுத்த செய்தி