அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் அவர்களை செருப்பால் அடிங்க என்று தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்த தெலுங்கானாவில் நடந்த, எஸ்சிசிஎல் அமைப்பின் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஷ்டிரிய சமிதி கட்சியின், தெலுங்கானா போகு கானி கர்மிகா சங்கம் வெற்றி பெற்றது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர் கூறியதாவது,
எஸ்சிசிஎல்’ல் லஞ்சத்தை அனுமதிக்காதீர்கள் எனவும், ஒருவேளை எந்த அதிகாரியாவது உங்களின் அடிப்படை தொழிலாளர் பயன்களை பெற லஞ்சம் கேட்டால் அவர்களை செருப்பால் அடியுங்கள் என்றும், லஞ்சம் கேட்பவர்களுக்கு சரியான பாடம் புகட்டுங்கள் என்றும் அவர் கூறியுள்ளது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தகுதி உடைய தொழிலாளர்கள் அனைவருக்கும் வட்டியில்லாத வீட்டு கடன் வழங்கப்படும் எனவும், வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் கூறிய தெலுங்கான முதல்வர், எஸ்சிசிஎல் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஐஐடி’க்கள் மற்றும் ஐஐஎம்’களில் படிக்க வாய்ப்பு கிடைத்தால் அதற்கான கல்வி செலவை மாநில அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.
மேலும் மக்களின் பிரச்சனைகளை நேரடியாக கண்டறிய, சிங்கரனி யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும், சிங்கரனி மருத்துவமனையின் சேவையை சோதிக்க, அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெலுங்கான முதல்வர் சந்திரபாபு தெரிவித்தார்.
If any officials want illegal money hit on their face with sleepers – telugana cm