ஆப்நகரம்

வாக்குச் சீட்டு முறை வேண்டுமா? அப்படினா தேர்தலையே புறக்கணிக்கலாமே - ராஜ் தாக்கரே!

தேர்தலை புறக்கணிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் ராஜ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 31 Aug 2018, 4:31 am
மும்பை: தேர்தலை புறக்கணிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் ராஜ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil Raj Thackeray.


இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மகாராஷ்டிர நவ்நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த 2014ஆம் ஆண்டிற்கே பிறகே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அதன்பிறகான தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வந்துள்ளது. பல்வேறு தொகுதிகளில் எங்கள் தொண்டர்களும், நிர்வாகிகளும் கடின உழைப்பைச் செலுத்தியும் தோல்வியே மிஞ்சியுள்ளது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், சில வேட்பாளர்கள் ஒரு ஓட்டு கூட பெறாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்? முதல் உலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகள் இயந்திரங்களை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறைக்கு மாறியுள்ளன.

தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி வருவது இந்தியா, நைஜீரியா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளே ஆகும். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திர முறையை கைவிடுவது சிரமமான காரியம்.

எனவே வாக்குச்சீட்டு கொண்டு வரும் வரை, அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஒன்றாக கூற வலியுறுத்தியுள்ளார்.

If EVMs used boycott 2019 elections, Raj Thackeray urges parties.

அடுத்த செய்தி