ஆப்நகரம்

தாஜ்மகால் அழிந்துபோனால் மீண்டும் பாதுகாக்க முடியாது; உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

தாஜ்மகால் அழிந்து போனால், மீண்டும் அதை பாதுகாக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

THE ECONOMIC TIMES 29 Aug 2018, 6:28 am
புதுடெல்லி: தாஜ்மகால் அழிந்து போனால், மீண்டும் அதை பாதுகாக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Taj_Mahal


உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. இதைப் பாதுகாக்க வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, தாஜ்மகால் அழிந்து போனால், அதை பாதுகாக்க அதிகாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வராது என்று எச்சரித்தனர்.

தாஜ்மகால் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் குறித்து தெரிவிக்க வேண்டும். தாஜ்மகாலை பாதுகாக்க டெல்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக் கலை கல்லூரி தொலைநோக்கு ஆவணத்தை தயாரித்து வருகிறது.

இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு உள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நட்கர்னி கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளிடம் இருந்து தாஜ்மகாலை பாதுகாக்க ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.

ஆக்ராவை கலாச்சார நகராக அறிவிப்பது தொடர்பான திட்டத்தை உத்தரப்பிரதேச மாநில அரசிடம் கேட்டிருப்பதாக கூறினார். இந்த வழக்கு வரும் செப்டம்பர் 25க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

If Taj Mahal goes once, you will not get a second chance warns SC.

அடுத்த செய்தி