ஆப்நகரம்

அரசு அனுமதித்தால், ரூ.35க்கு பெட்ரோல், டீசல் வழங்குவேன்: பாபா ராம்தேவ்

பிரபல சாமியாரான பாபா ராம்தேவ், அரசு அனுமதித்தால் இந்தியா முழுவதும் ரூ.35-40க்கு பெட்ரோல், டீசல் வழங்குவதாக தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யமடைய செய்துள்ளது.

Samayam Tamil 16 Sep 2018, 5:04 pm
பிரபல சாமியாரான பாபா ராம்தேவ், அரசு அனுமதித்தால் இந்தியா முழுவதும் ரூ.35-40க்கு பெட்ரோல், டீசல் வழங்குவதாக தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யமடைய செய்துள்ளது.
Samayam Tamil அரசு அனுமதித்தால், ரூ.35க்கு பெட்ரோல், டீசல் வழங்குவேன்: பாபா ராம்தேவ்
அரசு அனுமதித்தால், ரூ.35க்கு பெட்ரோல், டீசல் வழங்குவேன்: பாபா ராம்தேவ்


வட இந்தியாவில் மிகவும் பிரபலமான சாமியார்களில் ஒருவராக இருப்பவர் பாபா ராம்தேவ். பல கோடிகளில் புரளும் இவர், பதஞ்சலி என்ற தனி நிறுவனத்தையும் வைத்துள்ளார். யோகா நிபுணரான இவர், பாஜக ஆதரவாளராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பாபா ராம்தேவ் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அவர், “அரசு சில வரிச் சலுகைகளோடு அனுமதி வழங்கினால், இந்தியா முழுவதும் ரூ.35-40 க்கு பெட்ரோல்,டீசலை வழங்குவேன். எரிபொருட்கள் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட வேண்டும். தொடர் விலையுயர்வு மோடி அரசை கடுமையாக பாதிக்கும். அவர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் பணத்தைத் தேடி ஓடுவதில்லை, பணம் என்னைத் தேடி வருகிறது. நான் அரசியலில் இருந்து விலகிவிட்டேன். நான் எல்லா கட்சியிலும் இருப்பேன், ஆனால், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. சிலர் பசுக்களை மத ரீதியாக பார்க்கின்றனர். பசுவிற்கு என்று மதம் கிடையாது” என்று தெரிவித்தார்.

மேலும், தன்பாலின உறவுக்கான தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது குறித்து பேசிய அவர், அது இயற்கைக்கு முற்றிலும் மாறானது என கருத்துத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி