ஆப்நகரம்

பணமிருந்தாதான் படிக்கணுமா? ... இன்னும் என்னென்ன செய்யும் மத்திய அரசு...?..

இந்தியாவின் சிறந்த தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களான ஐஐடி யில் கல்விக்கட்டணம் உயர்ந்துள்ளது. உயர்ந்துள்ளது என்றால் வழக்கம் போல அல்ல. மடங்குகளில் உயர்ந்துள்ளது. அதிலும் 900 % உயர்ந்திருக்கிறது

Samayam Tamil 30 Sep 2019, 4:09 pm
இந்தியாவின் சிறந்த தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களான ஐஐடி யில் கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்வு என்றால் வழக்கம் போல அல்ல. இந்த முறை மடங்குகளில் உயர்ந்துள்ளது. மடங்குகளும் ஒன்றல்ல இரண்டல்ல, 900 % உயர்ந்திருக்கிறது. கல்விக்கு காலம் சரியில்லை என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?
Samayam Tamil iit


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடந்த கூட்டத்தில் இவ்வாறு கல்விக்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல 5 ஆண்டுகால பணிக்கு பிறகு ஆசிரியர்களின் தரம் பரிசீலிக்கப்ப்ட வேண்டும் என்றும் முடிவு செய்யப்படடுள்ளது.

தற்போது ஒரு பருவத்துக்கு (செமஸ்டர்) 5,000 ரூ. முதல் 10,000 ரூ வரை வசூலிக்கப்படுகிறது. (ஐஐடிக்கு ஐஐடி மாறுபடும்). ஆனால், இனி இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்த பிறகு, மாணவர்கள் , ஆண்டொன்றுக்கு சுமார் 2 லட்ச ரூபாய் வரை செலுத்த நேரிடும்..

இதனால், மேலும் மேலும் கல்வி எளிய மக்களை விட்டு விலகிப்போவதே நடைபெறும். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்க , பயிற்சி வகுப்புகளுக்கு பணம் கட்டவே படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில், எதன் அடிப்படையில் இந்த முடிவெடுத்தார்கள்.?

அதேபோல, முதுகலை மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையும் நிறுத்தப்பட உள்ளது.


கல்வி எல்லோருக்குமானது என்று பொதுவெளியில் பேசுவதும், செயல்பாட்டில் பணமிருப்பவனுக்கே எல்லாம் என்பதை மீண்டும் மீண்டு உறுதி செய்வதுமாக இருதுருவ ஆட்டத்தை கவனிக்க முடிகிறது.

கல்வி எளியவர்க்கு எட்டாக்கனி ஆகவேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறார்களா? என்ற கேள்விதான் மீண்டும் மீண்டும் எழுகிறது...

அடுத்த செய்தி