ஆப்நகரம்

இது தான் கொரோனா வைரஸா? முதல் புகைப்படம் வெளியீடு!

கொரோனா வைரஸின் முதல் புகைப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான INSERM வெளியிட்டுள்ளது

Samayam Tamil 26 Mar 2020, 2:41 pm
சென்னை: கோவிட்-19 தொற்று நோய்க்கு காரணமாக கொரோனா வைரஸின் முதல் புகைப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil கொரோனா வைரஸ் புகைப்படம்
கொரோனா வைரஸ் புகைப்படம்


உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொற்றானது கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இதற்கு Severe acute respiratory syndrome (SARS) கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் கோவிட்-19 தொற்றானது மூக்கு மற்றும் தொண்டை உள்ளிட்ட மேல் சுவாசக்குழாயில் இருக்கும் போது மட்டுமே அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே, கீழ் சுவாசக்குழாயை தாக்கும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மருத்துவருடன் தொடர்பில் இருந்த 900 பேருக்கு தனிமை!!

சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி வருகிறது. இந்த நோய்த் தொற்றால் சர்வதேச அளவில் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நயவஞ்சக வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கோவிட்-19 தொற்று நோய்க்கு காரணமாக கொரோனா வைரஸின் முதல் புகைப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.


பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதாரம் மற்றும மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான Inserm (Institut national de la santé et de la recherche médicale) Covid-19 தொற்றுநோய்க்குக் காரணமான SARS-CoV-2 வைரசின் படத்தினை உலகில் முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

மனிதனின் சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் இந்த வைரசின் படத்தினைத் தனிமைப்படுத்தபட்ட கொரோனா நோயளியி ஒருவரிடமிருந்து பெற்றுள்ளனர். இந்த தகவலை Inserm நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி