ஆப்நகரம்

4 மாநிலங்களில் மிககனமழை, 3இல் கனமழை- வானிலை எச்சரிக்கை!

பருவமழை காரணமாக நாட்டில் வடக்கில் உள்ள 7 மாநிலங்களை குறிப்பிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை முதல் மிககனமழை எச்சரிக்கை வரை வழங்கியுள்ளது...

Samayam Tamil 17 Aug 2020, 7:43 pm
பருவ மழை காரணமாக நாட்டின் வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. டெல்லி, குஜராத், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களுக்கு முன் பெய்த கனமழைக் காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
Samayam Tamil 4 மாநிலங்களில் மிககனமழை, 3இல் கனமழை- வானிலை எச்சரிக்கை!
கோப்புப்படம்


இந்த சூழலில் குறிப்பிட்ட பகுதிகள் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், “குஜராத், மகாராஷ்டிரா, கோவா ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி சம்பந்தப்பட்ட மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேவேளை, “வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடடே, 7 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!

இதுவரை பதிவான மழைக் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே வடமாநில மக்கள் இப்போது வரை மீள முடியாமல் திணறி வரும் சூழலில், மீண்டும் கனமழை, மிககனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டிருப்பது பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

இந்த கனமழை எச்சரிக்கை குறிப்பிட்ட மாநிலங்களுக்கு 5 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையையடுத்து, மழை வெள்ளம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தயாராகி வருகின்றனர்.

அடுத்த செய்தி