ஆப்நகரம்

திருப்பதி ஏழுமலையான் தரிசனமா? நடந்தே வரும் பக்தர்களுக்கு ஒரு கண்டிஷன்... மிஸ் பண்ணிடாதீங்க!

ஏழுமலையானை தரிசிக்க நடைபாதை வழியாக செல்லும் பக்தர்கள் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Apr 2023, 3:21 pm
திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவிய போது திருமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்தே வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.
Samayam Tamil important announcement for tirumala tirupati devotees for divya darshan with aadhaar card says ttd
திருப்பதி ஏழுமலையான் தரிசனமா? நடந்தே வரும் பக்தர்களுக்கு ஒரு கண்டிஷன்... மிஸ் பண்ணிடாதீங்க!


​இலவச தரிசன டோக்கன்

அலிபிரி வழியாக வரும் பக்தர்களுக்கு காளி கோபுரத்தில் 10 ஆயிரமாவது படிக்கட்டிலும், ஸ்ரீவாரி மெட்டு வழியாக வருபவர்களுக்கு ஆயிரத்து 250வது படிக்கட்டிலும் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்படும். இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இலவச தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக காளி கோபுரத்தில் 14 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.

​ஆதார் கார்டு அவசியம்

தற்போது 10 ஆயிரம் டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு வழியாக வருபவர்களுக்கு 6 ஆயிரம் டோக்கன்களுக்கு பதிலாக 5 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் பக்தர்கள் தங்களது ஆதார் கார்டை காட்டினால் மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதலில் சில நாட்களுக்கு சோதனை ஓட்டமாக இந்த நடைமுறை பின்பற்றப்படும்.


திருப்பதி டூ திருமலை: காலில் கட்டி கஞ்சா கடத்திய TTD ஊழியர்... ஆடிப் போன போலீஸ்!

கோடை விடுமுறை

அதன்பிறகு முழு வீச்சில் அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதார் கார்டு இல்லாமல் வந்தால் இலவச டோக்கன்கள் கிடைக்காது எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரை மூச்சு முட்டும் அளவிற்கு ஏழுமலையானை தரிசிக்க குவிவர்.

​தும்புரு தீர்த்த முக்கோதி உத்சவம்

இதற்கிடையில் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ஸ்ரீ தும்புரு தீர்த்த முக்கோதி உத்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஏப்ரல் 6ஆம் தேதி காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் தும்புரு தீர்த்தத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.

பக்தர்களுக்கு வசதிகள்

எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் உரிய ஏற்பாடுகளை தேவஸ்தானம் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு, குடிநீர், முதலுதவி, மருத்துவ வசதி போன்ற வசதிகள் சிறப்பு கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதய மற்றும் சுவாச பாதிப்புகள் கொண்டவர்கள் நடந்தே திருமலைக்கு வர வேண்டாம்.

​தேவஸ்தானம் வேண்டுகோள்

சமையல் பாத்திரங்கள், தீப்பற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டாம். திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் காவல்துறை, வனத்துறை, கண்காணிப்பு துறை ஆகியவற்றுக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி