ஆப்நகரம்

வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்

இந்தியாவில் முதல்முறையாக வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளாா் இந்து மல்கோத்ரா.

Samayam Tamil 12 Jan 2018, 12:06 pm
இந்தியாவில் முதல்முறையாக வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளாா் இந்து மல்கோத்ரா.
Samayam Tamil in a first woman lawyer to be directly promoted as supreme court judge
வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்


இந்து மல்கோத்ரா உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர். பெங்களூருவைச் சேர்ந்த இவர், 1956-ம் ஆண்டு பிறந்தவர். 1983-ம் ஆண்டு வழக்கறிஞர் தொழிலுக்குள் நுழைந்தார். சுமார் 30 ஆண்டுகள் அனுபவமிக்க இவரின் திறமையை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய கொலிஜியம், நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்துள்ளது. அதேபோல், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜேசப்பும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவா்களின் பெயா்களை மத்திய அரசு அங்கீகரித்திடும் பட்சத்தில் இவா்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பாா்கள். அவ்வாறு இந்து மல்கோத்ரா நீதிபதியாக பதவியேற்றால் வழக்கறிஞராக பணியாற்றி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக தோ்ந்தெடுக்கப்படும் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெறுவாா்.

வழக்குகளை தீா்த்து வைப்பதில் மிகவும் திறமைசாளி என்று பெயா் பெற்ற இந்து மல்கோத்ரா உச்சநீதிமன்றத்தின் 7வது பெண் நீதிபதி என்ற பெருமையையும் பெறுவாா்.

அடுத்த செய்தி